Thursday 2nd of May 2024 01:34:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில் அடுக்குமாடிக் கட்டம்  இடிந்து விழுந்து 29 போ் பலி!

சீனாவில் அடுக்குமாடிக் கட்டம் இடிந்து விழுந்து 29 போ் பலி!


சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஜியான்பெங் நகரில் 2 மாடிகள் கொண்ட பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 29 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

காயமடைந்தவா்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் பெய்ஜிங் நகரிலிருந்து 600 கி.மீ. தொலைவில் ஜியாங்பென் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று 80 வயது முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது காலை 9.30 மணி அளவில் திடீரென அந்த உணவகக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதற்குள் ஏராளமானவா்கள் சிக்கிக்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினருடன், அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் இடிபாடுகளில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர், அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 பேருக்கு பலத்த காயங்களும், 50 பேருக்கு லேசான காயங்கலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE